Thursday, March 5, 2015

அகில பாரத நாடகம்

பொதுவாக அகில பாரத நாடகம் என்ற பெயரில் ஒலிபரப்பப்படும் நாடகங்கள் குறைவான பாத்திரங்களையும், நிறைய உரையாடல்களையும், அதை விட அதிகமான அளவில் பெருமூச்சுக்களையும், விம்மல்களையும், போனால் போகட்டும் என்று கடுகளவு கதைக்கருவையும் கொண்டிருக்கும். ஆனால் இந்த மாதம் ஒலிபரப்பபட்ட 'ஒரு கீதத்தின் மரணம்' என்ற நாடகத்தைப் பற்றி அவ்வளவு அலட்சியமாகச் சொல்லி விடுவதற்கில்லை.

ஒரு மகாராஜாவால் வளர்க்கப்பட்டு வரும் ட்யூக் என்ற நாய்க்கும், ஜாலி என்ற மானுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பின்னணியாக வைத்து அழகாகத் தீட்டப்பட்டிருக்கும் பிரசித்தி பெற்ற ஒரியா எழுத்தாளரின் கதையின் அழகு, நாடகமாக்கப்பட்ட விதத்தில் சிதையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாலியின் மரணத்துக்கான சூழ்நிலையை உருவாகியிருப்பதில் சோகமும், பரிதாபமும் இழையோடினாலும், விருந்துபசாரத்தில் மகாராஜா அத்தனை தீவிரமாக இருக்க வேண்டுமா? மானைக் கொல்வதில்லை என்று தன் மகளுக்கு வாக்களித்திருப்பதைச் சொல்லியிருக்கலாமே! கோளாறு நாடக ஆக்கத்தில்தான் இருக்க வேண்டும்.

இது போன்ற நாடகங்களை ஒலிபரப்புவதன் மூலம்  மற்ற மொழி இலக்கியங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் அகில இந்திய வானொலியின் பணி மேலும் சிறக்கட்டும்.

2 comments:

  1. All India Radio has a formidable task at it's hand with the advent of TV. How ever like book reading AIR has it's own audience in old generation and the new as the commercial advertising is too irritating in present day visible media.

    ReplyDelete